இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசிக்கு, குரு 6வது மற்றும் 9வது வீட்டின் ஆதிபத்தியம் பெற்றவர். 6வது வீடு என்பது ஓரு துர் ஸ்தானமாகும். 6வது வீடு கடன், நோய் மற்றும் எதரிகளின் பலத்தினை பற்றி கூறுவது ஆகும். ஆனால் 9வது வீடு என்பது குடும்பத்தில் நடக்கும் நல்ல நிகழ்சிகளை சொல்வதாகும். 9வது வீடு பாக்கிய ஸ்தானம் என்ற மிக நல்ல ஸ்தானம் ஆகும். கடக ராசியாதிபதி சந்திரன் குருவினை சமமாக பாவிப்பார். ஆனால் குரு சந்திரனை நட்பாக பாவிப்பார். ஆகவே குரு கடக ராசிக்கு நல்லவரும் அவரே, கெட்டவரும் அவரே. அதனால் குரு எங்கு இருக்கிறார் என்பது மிகவும் முக்கியம். குரு இருக்கும் இடத்தை பொறுத்தே நல்லதையோ அல்லது கெடுதலையொ செய்வார். குரு இப்பொழுது பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி புதனுடைய வீடு ஆகும். குரு புதனை எதி ரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற ந...